கல்லூரி பகுதியில் அதிகளவில் நடைபெற்று வரும் கஞ்சா விற்பனையை தடுக்கக் கோரி பாஜக இளைஞர் அணியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்லூரிகள் நிறைந்த இப்பகுதிகுயில் அதிகளவிலான கஞ்சா விற்பனைகளும் நடைபெற்று வருகிறது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும், ரோந்து என்ற பெயரில் சென்று சிலரை கைது செய்து பின் விடுவித்து விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்து தங்களது கஞ்சா விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாதம்பட்டி- காலபாளையம் சாலையிலும் சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்லூரிகள் நிறைந்த இப்பகுதிகுயில் அதிகளவிலான கஞ்சா விற்பனைகளும் நடைபெற்று வருகிறது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
இதுகுறித்து, காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும், ரோந்து என்ற பெயரில் சென்று சிலரை கைது செய்து பின் விடுவித்து விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்து தங்களது கஞ்சா விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாதம்பட்டி- காலபாளையம் சாலையிலும் சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.