கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வாரியான உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Coimbatore:

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

சாலைகளில் மழைநீர் தேங்குவதை விரைவாக அகற்றும் வகையில் ரயில் நிலையம், லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலம், கிக்கானி பள்ளி மற்றும் காளீஸ்வரா மில் உள்ளிட்ட பகுதிகளில் உயர் திறன் கொண்ட மின் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவிநாசி மேம்பாலம் அருகே 184 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டருடன் ஐந்து மின் மோட்டார்களும், காளீஸ்வரா மில் பகுதியில் 125 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டருடன் மூன்று மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் கூடுதல் மின் மோட்டார்களும் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல், பலத்த காற்று மற்றும் மழையின் போது சாலைகளில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்காக கூடுதல் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் குறைகள் அல்லது அவசர தேவைகள் ஏற்பட்டால் மாநகராட்சியின் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், வடக்கு மண்டலத்திற்கு 89259 75980, மேற்கு மண்டலத்திற்கு 89259 75981, மத்திய மண்டலத்திற்கு 89259 75982, தெற்கு மண்டலத்திற்கு 90430 66114 மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு 89258 40945 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...