மின்தடை புகார்களுக்கு ‘மின்னகம்’ சேவையை பயன்படுத்த மின்வாரியம் அறிவுறுத்தல்

மின்தடை,!ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களை, 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை, ஜூன் 5: மின்தடை மற்றும் மின்விநியோகம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய பொதுமக்கள் ‘மின்னகம்’ (Minnagam) சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் தங்களின் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், குறிப்பாக ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), மின்தடை, குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களையும் 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் ‘மின்னகம்’ சேவையை அதிகளவில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...