பீளமேடு வார்டு 27-ல் சுகாதார மையம், பள்ளி, தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆரம்ப சுகாதார மையம், பள்ளியில் புத்தக வழங்கல், சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பல்வேறு மேம்பாட்டு மற்றும் நலத்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாரதி காலனி ஆரம்ப சுகாதார மையம், துவக்கப்பள்ளி, சாக்கடை பராமரிப்பு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் அடங்கும்.



பீளமேடு பாரதி காலனி பகுதியில் இயங்கி வரும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் பொதுமக்கள் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேட்டையும் சரிபார்த்தார். இந்த ஆய்வில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.



பீளமேடு கோயமுத்தூர் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு புதிய புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கவுன்சிலர் அம்பிகா தனபால் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை நேரடியாக வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இதில் உடன் இருந்தனர்.



கணக்குப்பிள்ளை வீதி பகுதியில் சாக்கடை அடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை அடைப்பை முழுமையாக சரி செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பாரதி காலனி பகுதியில் தினசரி குப்பை சேகரிப்பு சரியாக நடைபெறுகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குப்பை வாங்கும் ஆட்டோ சரியாக வருகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் பேட்டரி ஆட்டோ மூலம் குப்பை சேகரிப்பு பணியை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தரும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தினார். வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி இதில் உடன் இருந்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...