கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியான கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் மீதான விசாரணையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இருவரிடமும் காவல் விசாரணை நடத்துவதன் மூலம் வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அது உதவியாக இருக்கும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சிறையில் இருந்தபோது உணவு அருந்தச் சென்ற நேரத்தில், சக கைதிகள் ஐந்து பேர் இணைந்து தட்டு, டம்ளர், கரண்டி உள்ளிட்ட பொருட்களால் கார்த்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து கார்த்திக்கை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஐந்து கைதிகள் திருச்சி மற்றும் வேலூர் சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இருவரிடமும் காவல் விசாரணை நடத்துவதன் மூலம் வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அது உதவியாக இருக்கும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சிறையில் இருந்தபோது உணவு அருந்தச் சென்ற நேரத்தில், சக கைதிகள் ஐந்து பேர் இணைந்து தட்டு, டம்ளர், கரண்டி உள்ளிட்ட பொருட்களால் கார்த்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து கார்த்திக்கை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஐந்து கைதிகள் திருச்சி மற்றும் வேலூர் சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.