சாமி கும்பிடுவது போல் நடித்து வைசியாள் வீதி கோவிலில் தங்க நகைகள் திருட்டு: ஒருவர் கைது

கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், பக்தர் போல் நுழைந்த நபர் ஒருவர் வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்கச் சங்கிலிகளை திருடிய சம்பவத்தில், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் பெரிய கடை வீதி போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளாக நரசிம்மர் (61) என்பவர் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலைத் திறந்து பூஜைப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், காலை 7.20 மணி அளவில் வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளுக்கு பூஜை செய்வதற்காக சென்றபோது, சிலைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தலா 6 கிராம் எடையுடைய இரண்டு தங்கச் சங்கிலிகள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த ஒருவர், பக்தர் போல கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவது போல் நடித்து, சிலைகளில் இருந்த தங்கச் சங்கிலிகளை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கடை வீதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமாரின் மகன் செந்தில்பிரபு (45) என்பவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவிலில் பக்தர் போல நடித்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...