கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.


கோவை: கோவை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், அந்த சிறுமிக்கு நீதி கேட்டு கோவையில் உள்ள ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

குழந்தையின் ஆன்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டியும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.



சமூகத்தில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் மக்களுக்காக இயங்கி வரும் இந்தக் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்கள், தங்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். "ஒரு பிஞ்சு குழந்தைக்கு இப்படிப்பட்ட கொடுமை எப்படி நடந்தது?" என்ற வேதனையும், கோபமும் கலந்து அவர்களின் முகங்களில் வெளிப்பட்டது.

இந்த நிகழ்வில், குற்றவாளிகளுக்கு POCSO சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்க வேண்டும், இனி எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற கொடுமை நேரக்கூடாது என்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி நிகழ்வு, ஒரு சாதாரண அஞ்சலியாக இல்லாமல், "குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்" என்ற சமூகத்தின் மனவேதனையை வெளிப்படுத்தும் உருக்கமான தருணமாக மாறியது.

"பெற்ற மனம் பதறுகிறது… பிஞ்சு உயிரின் அலறலுக்கு சட்டம் மிகக் கடுமையான நீதியை வழங்கட்டும்!" என்ற வாசகத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

சூலூர் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...