மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, புதிய குறுந்தொழில் பேட்டைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


Coimbatore: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில், இன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல் மற்றும் சிவசண்முக குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மாதாந்திர நிலை கட்டணமாக கிலோவாட்டுக்கு ரூ.35 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது ரூ.165 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

சுமார் 450 சதவீத கட்டண உயர்வு காரணமாக தொழில் முனைவோர் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், எனவே தமிழக அரசு உடனடியாக மின்சார நிலை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாநில வணிகவரி துறை 2007 முதல் 2022 வரையிலான பழைய கணக்குகளை கேட்டு ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதித்து வருவது தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும், இந்த நடைமுறையை தமிழக அரசு தடை செய்து தொழில் முனைவோரின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை குறிச்சி பகுதியில் 53 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்பேட்டை அமைக்கப்பட்ட பிறகு, உற்பத்தி சார்ந்த குறுந்தொழில் முனைவோருக்காக புதிய தொழில்பேட்டைகள் உருவாக்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, கோவை நகரைச் சுற்றிய 25 கிலோமீட்டர் சுற்றளவில் அரசுக்கு சொந்தமான அல்லது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தி, குறுந்தொழில் முனைவோருக்கென புதிய தொழில்பேட்டைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், ஜாப் ஆர்டர் நிறுவனங்கள், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் மற்றும் கம்ப்ரசர்களுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தொழில்பேட்டைகள் அருகே செயல்படும் மதுபான பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலுக்கு தனி குறியீட்டு எண் வழங்கி, பிளாஸ்டிக் தொழில் உற்பத்தியாளர்களுக்கென தனி தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அரசுத் துறைகள் டெண்டர் விடும்போது தமிழகத்தை சேர்ந்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...