கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் தற்காலிகமாக கொச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: இன்று மாலை கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் கிளைகள் சாய்ந்து விழுந்தன. இதன் தொடர்ச்சியாக, கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை நோக்கி வந்த சில விமானங்கள் தற்காலிகமாக கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு பணிக்காக சிஐஎஸ்எஃப் வீரர்கள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இரவு 9.30 மணிக்குப் பிறகு நிலைமை சீரடையும் என்றும், அதன் பின்னர் கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...