சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.


Coimbatore: சனாதன தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருவதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.



இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் (இளைஞர் அணி) கே. சூர்யா அளித்த மனுவில், கடந்த 2023ஆம் ஆண்டு சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் மீது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், மே 2026இல் தமிழக சட்டமன்றத்தில் “சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்” என அவர் மீண்டும் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படும் மதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துக்கள் கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதோடு, சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்தி பொது அமைதியை பாதிக்கும் சூழலை உருவாக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் ஆசான் மௌலானா ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்து, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...