சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.


Coimbatore: சனாதன தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருவதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.



இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் (இளைஞர் அணி) கே. சூர்யா அளித்த மனுவில், கடந்த 2023ஆம் ஆண்டு சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் மீது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், மே 2026இல் தமிழக சட்டமன்றத்தில் “சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்” என அவர் மீண்டும் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படும் மதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துக்கள் கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதோடு, சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்தி பொது அமைதியை பாதிக்கும் சூழலை உருவாக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் ஆசான் மௌலானா ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்து, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...