திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததால் மூன்று உயிர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமியின் உறுப்பு தானம் மூன்று நோயாளிகளுக்கு புதுவாழ்வு அளித்துள்ளது. மே 10ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருப்புசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த துயரமான சூழலிலும் மனஉறுதியுடன் செயல்பட்ட கருப்புசாமியின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரது கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வழங்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், மருத்துவமனை முதல்வர், மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் கருப்புசாமியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான வெஞ்சமடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இளம் வயதில் உயிரிழந்த கருப்புசாமியின் குடும்பத்தினரின் மனிதாபிமான முடிவு மூன்று உயிர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருப்புசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த துயரமான சூழலிலும் மனஉறுதியுடன் செயல்பட்ட கருப்புசாமியின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரது கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வழங்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டன.
உடல் உறுப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், மருத்துவமனை முதல்வர், மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் கருப்புசாமியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான வெஞ்சமடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இளம் வயதில் உயிரிழந்த கருப்புசாமியின் குடும்பத்தினரின் மனிதாபிமான முடிவு மூன்று உயிர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.