மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததால் மூன்று உயிர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமியின் உறுப்பு தானம் மூன்று நோயாளிகளுக்கு புதுவாழ்வு அளித்துள்ளது. மே 10ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.




கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருப்புசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.




இந்த துயரமான சூழலிலும் மனஉறுதியுடன் செயல்பட்ட கருப்புசாமியின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.




அவரது கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வழங்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டன.




உடல் உறுப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், மருத்துவமனை முதல்வர், மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் கருப்புசாமியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான வெஞ்சமடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.




இளம் வயதில் உயிரிழந்த கருப்புசாமியின் குடும்பத்தினரின் மனிதாபிமான முடிவு மூன்று உயிர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...