மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 15 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகளில் பணிபுரியும் நெசவாளர்களின் நலன் கருதி இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: தமிழக வெற்றி கழகம் சார்பில் அளிக்கப்பட்ட மின்சார சலுகை உள்ளிட்ட நெசவாளர்கள் நல வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு வலுவான கோரிக்கை விடுத்துள்ளனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஜவுளி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஜவுளித்துறை பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாநில செயலாளர் கந்தவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் Vijay மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


ஜவுளி துறையின் பங்களிப்பு


விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி தொழில் பெரும் பங்காற்றி ஒரு கோடிக்கு மேல் வேலைவாய்ப்பு மூலம் தங்களுடைய வாழ்வாதாரத்தை மக்கள் பெற்று வருகிறார்கள். ஜவுளி துறையில் குறிப்பாக நெசவாளர்கள் விசைத்தறி தொழில் மூலம் 1.60 லட்சம் மின் இணைப்பு வாயிலாக 15 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. ஒரு லட்சத்திற்குள் கைத்தறி மற்றும் பெடல் தறிகளும், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தானியங்கி தறிகள் மூலம் தினந்தோறும் மூன்று கோடி மீட்டருக்கு மேற்பட்ட துணிகளை உற்பத்தி செய்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.


தேர்தல் வாக்குறுதிகள்


நெசவாளர்களின் நலன் கருதி தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு 1,500 யூனிட் வரை மின்சார சலுகை, நெசவாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு திட்டம், நெசவு பொருளை சந்தைப்படுத்த செயலி, விசைத்தறி கூடங்களுக்கு 100% சூரியஒளி மின்சாரம் அமைக்க மானியம் போன்றவை நெசவாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.


கூட்டமைப்பின் கோரிக்கைகள்


எதிர்வரும் ஐந்து ஆண்டு காலம் தமிழகத்தில் ஜவுளித்துறை இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் முதன்மை பெற தங்களுடைய அமைச்சரவையில் ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களை தமிழகத்தில் பெரிதும் ஜவுளி தொழில் உள்ள கொங்கு மண்டலத்தில் உள்ள ஜவுளி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புகளை வழங்கி தமிழக நெசவாளர்களுக்கு சிறப்பான வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...