கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்வரத்து மற்றும் வெளியேற்ற விவரங்கள் வெளியிடப்பட்டன.


Coimbatore:

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. டிசம்பர் 5 நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 62.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 122 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், 368 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 36.05 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 93 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 1070 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் தற்போது 10.6 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் 20.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் 32.2 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 790 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், 630 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மழை தொடரும் பட்சத்தில் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும், நீர்வரத்து நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...