காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்றனர். ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இத்திருட்டு சம்பவம் காங்கேயம் பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பாப்பினி பகுதியில் விவசாயி பொன்னுசாமியின் (65) தோட்டத்தில் இருந்து மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வளர்த்து வரும் பொன்னுசாமி, வழக்கம் போல் நேற்று மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரத்தில் தோட்டத்தில் உள்ள முக்கால் பட்டியில் அடைத்துவிட்டு இரவு தங்குவதற்காக வீட்டுக்கு சென்றார்.




நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்த 11 ஆடுகள், 1 கிடாரி மற்றும் 7 குட்டிகள் ஆகிய மொத்தம் 19 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் ஆகும் என்று விவசாயி பொன்னுசாமி தெரிவித்தார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக சென்றபோது ஆட்டுப்பட்டி காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் பகுதியில் சமீபத்தில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடிய சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தண்ணீர் இல்லாமல் விவசாயமே பொய்த்துப்போன நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து அதில் வருமானம் ஈட்டிவரும் விவசாயிகள் மத்தியில் இந்த திருட்டு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட ஆடுகளை மீட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பகுதி மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...