காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்றனர். ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இத்திருட்டு சம்பவம் காங்கேயம் பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பாப்பினி பகுதியில் விவசாயி பொன்னுசாமியின் (65) தோட்டத்தில் இருந்து மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வளர்த்து வரும் பொன்னுசாமி, வழக்கம் போல் நேற்று மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரத்தில் தோட்டத்தில் உள்ள முக்கால் பட்டியில் அடைத்துவிட்டு இரவு தங்குவதற்காக வீட்டுக்கு சென்றார்.




நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்த 11 ஆடுகள், 1 கிடாரி மற்றும் 7 குட்டிகள் ஆகிய மொத்தம் 19 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் ஆகும் என்று விவசாயி பொன்னுசாமி தெரிவித்தார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக சென்றபோது ஆட்டுப்பட்டி காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் பகுதியில் சமீபத்தில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடிய சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தண்ணீர் இல்லாமல் விவசாயமே பொய்த்துப்போன நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து அதில் வருமானம் ஈட்டிவரும் விவசாயிகள் மத்தியில் இந்த திருட்டு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட ஆடுகளை மீட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பகுதி மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...