கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில் வெளியிடப்பட்டது. கல்வி, ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.


கோவை: தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை பதிவு செய்த Oceans of Knowledge நூல் வெளியீட்டு விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.





இந்தியாவில் கடல்சார் ஆராய்ச்சி துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவராக டாக்டர் லால் மோகன் பரவலாக அறியப்பட்டவர்.தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகளில் உருவாக்கப்பட்ட Oceans of Knowledge நூலை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர்.





நூலாசிரியரும், ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் தலைவருமான முனைவர் அஜித்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அய்யாவழி சாமி தோப்பு பால பிரஜாபதி அடிகளார், ஜி.ஆர்.ஜி கல்வி நிறுவனங்களின் சேர்பர்சன் முனைவர் நந்தினி ரங்கசாமி, கோவை திருமண்டல துணைத் தலைவர் மற்றும் செயலாளர் டேவிட் பர்னபாஸ், ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முனைவர் டேவிட் வி. ராஜன், மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, சுஜாதா ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





நிகழ்ச்சியில் பேசியோர், கடல் உயிரியல், கடல்சார் வளங்கள் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் காக்கும் முயற்சிகள் உள்ளிட்ட துறைகளில் டாக்டர் லால் மோகன் செய்த பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.



கடல் உயிரினங்கள், கடல் சூழல் மற்றும் வளங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளில் சிறந்து விளங்கிய விஞ்ஞானியின் வாழ்க்கைப் பயணத்தை இந்த நூல் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.



கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பல்வேறு துறைகளின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதன் மூலம் சிறப்பு பெற்றது.



இறுதியாக, ஏ.ஜே.கே கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பிந்து அஜீத் நன்றி உரையாற்றினார்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...