வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். கோவை-ஷொரணூர் பயணிகள் ரயில் ஏப்ரல் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Coimbatore: பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், கோவையிலிருந்து இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, சில ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வாளையாறு பகுதியில் உள்ள ரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஏப்ரல் 11 மற்றும் 14ஆம் தேதிகளில் கோவை - மங்களூரு சென்ட்ரல் நிலையம் ரயில் (எண்: 16323) 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஏப்ரல் 11, 14, 19ஆம் தேதிகளில் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் காரணமாக கோவை - ஷொரணூர் பயணிகள் ரயில் (எண்: 56603) ஏப்ரல் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவைக்காக மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் தங்களது பயண திட்டங்களை இதனை கருத்தில் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...