கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்புகளுக்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. ரவி விருது வழங்கி சிறப்பித்தார்.


Coimbatore: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா மார்ச் 25, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.








தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதற்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது. இவ்விருதை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr. ரவி மற்றும் கலை, அறிவியல் பீட டீன் திருமதி ராகவி ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.








இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக Rotary International மாவட்டம் 3026-ன் மாவட்டத் தலைவர் Rtn. PP. Hendry Amalaraj கலந்து கொண்டார். மேலும் கௌரவ விருந்தினராக ஓம் சக்தி ராஜா ராஜேஸ்வரி ஆலயம், கோவையின் முன்னாள் செயலாளர் P. Duraisamay பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.








தமிழ் பண்பாடு மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...