மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் மக்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்தார். எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை வலியுறுத்தினார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு வருவதாகவும், தேர்தல் காலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மக்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார்.




25 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மேற்காசிய போரால் உலகமே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கப்பல்கள் கொண்டு வரும் கடல் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் உலகெங்கும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.


இந்தியாவில் எரிபொருள் விலை நிலைமை


ஆனால், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ளது. ஈரான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உரையாடி வருகிறார். அவர் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகளால் ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்தியா கச்சா எண்ணெய் கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன.


இந்தியாவில் சுமார் 30 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளன. அதில் சுமார் 20 கோடி இணைப்புகள் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 2014 முதல் வழங்கப்பட்டவை. வீடுகளுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது, குறிப்பாக குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நெருக்கடி எதிர்கொண்ட அனுபவம்


பிரதமர் நரேந்திர மோடி நெருக்கடியை எதிர்கொள்வதில் வல்லவர் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா காலகட்டத்தில் பார்த்தார்கள். கொரோனா பொதுமுடக்கத்தால் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா பேரழிவை சந்திக்கும் என உலகமே கணித்தது. ஆனால், அந்த பேரிடரை திறமையாக எதிர்கொண்ட பிரதமர் மோடி, 40க்கும் அதிகமான நாடுகளுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட உதவிகளை செய்தார்.


அதுபோலவே மேற்காசிய போர் நெருக்கடியையும் பிரதமர் மோடி எதிர்கொள்வார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். எனவே, இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்பட வேண்டும். வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மோடி அரசு மீட்டுள்ளது.


வதந்திகள் தோல்வியடைந்தன


பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை இரண்டு நாட்களில் கிழிந்ததை நாட்டு மக்கள் அறிவர். சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. பதுக்கலை தடுக்கவே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியில் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. அதனால், எந்த நெருக்கடியையும் இந்தியா சமாளிக்கும். எனவே, தேர்தல் நேரத்தில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் மக்களிடம் எடுபடாது என வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...