கோவை ரயில் நிலையத்தில் கைதி தப்பியோட்டம்



கருமத்தம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய வழக்கில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஜாமீனில் வந்த அவர்கள் ஆந்திராவிற்கு தப்பி சென்று வேறு நிறுவனதில் பணியாற்றிய போது அங்கேயும் திருடி மாட்டிக்கொண்டனர். அப்போது நெல்லூர் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெ.எம்-2 நீதிமன்றத்திற்கு ஆந்திர போலீசார் ரயில் மூலம் அழைத்து வந்தனர். பாதுக்காப்பிற்காக 4 ஆந்திர போலீசார் உடனிருந்தனர்.

கால் ஊனமுற்ற தீனதயாளன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று ஆந்திர போலீசாரிடம் கூறிய நிலையில், அவரை போலீசார் கழிவறைக்குள் செல்ல அனுமதித்தனர். அப்போது தீனதயாளன் சுவற்றின் மீது ஏறி தப்பிச்சென்றார். இது குறித்து கோவை ரயில்வே போலீசாரிடம் ஆந்திர போலீசார் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.

முன்னதாக, தீனதயாளன் மீது காளஹஸ்தி, சென்னை போன்ற இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. தற்போது கண்காணிப்பு காமிராக்களில் தப்பிச்சென்ற தீனதயாளனின் பதிவான காட்சிகள் மூலம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...