கோவை ரயில் நிலையத்தில் கைதி தப்பியோட்டம்



கருமத்தம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய வழக்கில் தீனதயாளன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஜாமீனில் வந்த அவர்கள் ஆந்திராவிற்கு தப்பி சென்று வேறு நிறுவனதில் பணியாற்றிய போது அங்கேயும் திருடி மாட்டிக்கொண்டனர். அப்போது நெல்லூர் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெ.எம்-2 நீதிமன்றத்திற்கு ஆந்திர போலீசார் ரயில் மூலம் அழைத்து வந்தனர். பாதுக்காப்பிற்காக 4 ஆந்திர போலீசார் உடனிருந்தனர்.

கால் ஊனமுற்ற தீனதயாளன் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று ஆந்திர போலீசாரிடம் கூறிய நிலையில், அவரை போலீசார் கழிவறைக்குள் செல்ல அனுமதித்தனர். அப்போது தீனதயாளன் சுவற்றின் மீது ஏறி தப்பிச்சென்றார். இது குறித்து கோவை ரயில்வே போலீசாரிடம் ஆந்திர போலீசார் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.

முன்னதாக, தீனதயாளன் மீது காளஹஸ்தி, சென்னை போன்ற இடங்களில் திருட்டு வழக்கு உள்ளது. தற்போது கண்காணிப்பு காமிராக்களில் தப்பிச்சென்ற தீனதயாளனின் பதிவான காட்சிகள் மூலம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...