கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் இரண்டாம் நாள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்தது. தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

முதல் நாளான நேற்று சுமார் 30க்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 17) நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்திய பணியாளர்கள், மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை தொடர்வதாக உறுதியாக தெரிவித்தனர்.



போனஸாக 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுவதாகவும், இது போதுமானதாக இல்லை என்றும் பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்நிலையில், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பணியாளர்கள் உறுதியாக கூறி, தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...