கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் இரண்டாம் நாள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்தது. தீபாவளி போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிகார குரல் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

முதல் நாளான நேற்று சுமார் 30க்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 17) நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்திய பணியாளர்கள், மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காணப்படும் வரை போராட்டத்தை தொடர்வதாக உறுதியாக தெரிவித்தனர்.



போனஸாக 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுவதாகவும், இது போதுமானதாக இல்லை என்றும் பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்நிலையில், மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பணியாளர்கள் உறுதியாக கூறி, தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...