திருப்பூரில் கனமழை: சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் பாட்டில்கள்

திருப்பூரில் மாலை 3 மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன.


திருப்பூர்: திருப்பூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் ஓடிய மழைநீரில் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூரில் மாலை சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பழ வஞ்சிபாளையம், முத்தையன் நகர், பிச்சம்பாளையம், அங்கேரிபாளையம், காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தாங்களாகவே மழைநீரை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காந்திநகர் அடுத்த ஃபயர் சர்வீஸ் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறிய நீரும் மழைநீரும் கலந்து அப்பகுதி சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.



இந்த நீரில் ஏராளமான குப்பைகளுடன் டன் கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிதந்து சென்றன. இக்காட்சி அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.



அப்பகுதி பொதுமக்கள் வெளியே நின்று குப்பைகள் தங்கள் வீட்டிற்குள் நுழையாதவாறு குச்சிகளை வைத்து தடுத்து மழைநீரில் இருந்து தங்களை காத்துக் கொண்டனர். இச்சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...