நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நல்லம்மன் கோவிலை சூழ்ந்த நீர், அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது

வடகிழக்கு பருவமழையால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நல்லம்மன் தடுப்பணை கோவிலையும் அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தது. பொதுமக்கள் எச்சரிக்கை.


திருப்பூர்: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழலில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.



இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணை கோவிலை நொய்யல் ஆற்று நீர் சூழ்ந்து கோவிலுக்கு செல்லும் பாதையை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது.



காரணமாக, பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டிபாளையம் அருகே அமைந்துள்ள அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்து நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் இருகரைகளை தொட்டு சென்று கொண்டிருக்கிறது. தரைப் பாலத்தை யாரும் வாகன ஓட்டிகள் கடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நீர்நிலைகள் அருகே செல்வதை தவிர்க்குமாறும், அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...