கோவையில் தொடர் கனமழை: சிவானந்தா காலனியில் மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து

கோவையில் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது. பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் மாலை முதல் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநகரில் பல முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சாய்பாபா காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில், இன்று சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது. இது போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது.

மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...