கோவையில் தொடர் கனமழை: சிவானந்தா காலனியில் மழை நீரில் சிக்கிய அரசு பேருந்து

கோவையில் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது. பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் மாலை முதல் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநகரில் பல முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் சாய்பாபா காலனி பகுதியில் தனியார் பேருந்து மழை நீரில் சிக்கிய நிலையில், இன்று சிவானந்தா காலனி ரயில்வே தரைப்பாளத்தில் அரசு பேருந்து மழை நீரில் சிக்கியது. இது போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது.

மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...