தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மரபணுத் தேர்வு குறித்த ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சி தொடக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கோயம்புத்தூரில் "மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள்" குறித்த ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியை அக்டோபர் 14 முதல் 18 வரை நடத்துகின்றன.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம், பிலிப்பைன்ஸ் ஆகியவை இணைந்து "மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள்" என்ற தலைப்பில் ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. இந்த பயிற்சி நிகழ்ச்சி அக்டோபர் 14 முதல் 18 வரை கோயம்புத்தூரில் உள்ள தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் மையத்தில் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஐசிஏஆர் ஆராய்ச்சி நிறுவனங்கள், கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகாவின் யுஏஎஸ் பெங்களூர் ஆகிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.



தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் இயக்குநர் முனைவர் ஆர்.ரவிகேசவன் வரவேற்புரை வழங்கினார். வளவாளர்களான முனைவர் ராஜா ரகுபதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், முனைவர் பார்த்திபன் பிரகாஷ், பிலிப்பைன்ஸ், சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோரும் பங்கேற்பாளர்களை வரவேற்றனர். பயிர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இளம் ஆராய்ச்சியாளர்கள் இந்த பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் மையத்தின் இயக்குனர் முனைவர் ந.செந்தில் தனது தொடக்க உரையில், மரபணு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அரிசி/கோதுமையில் மரபணுத் தேர்வைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எம்.ரவீந்திரன், தனது தலைமை உரையில், 2050-க்குள் உணவு தானிய உற்பத்தியைப் பாதுகாக்க மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காலநிலை மீள்தன்மையை அடைய பல்வேறு அழுத்த நிலைமைகளின் கீழ் அதிக விளைச்சலுக்கு பயிர்வகைகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.



தாவர உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் இ.கோகிலாதேவி நன்றியுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து மரபணுத் தேர்வு: கோட்பாடுகள் மற்றும் முறைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...