கோவை ஆனைகட்டி சாலையில் செங்கல் சூளை புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கன மழை காரணமாக சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையின் 100 அடி உயர புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் ஆனைகட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், சின்னத்தடாகம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள செங்கல் சூளையில் இருந்த புகைப்போக்கி உடைந்து கோவை ஆனைகட்டி சாலையில் விழுந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை ஆனைகட்டி சாலை, தடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பல்வேறு செங்கல் சூளைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.



இந்நிலையில், தண்ணீர் பந்தல் அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் இருந்த சுமார் 100 அடி உயரம் கொண்ட புகைப்போக்கி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த உடனேயே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விழுந்த புகைப்போக்கியை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கோவை ஆனைகட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இப்பகுதியில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட புகைப்போக்கிகள் தற்போது செயல்படாத நிலையில் உள்ளன. இவை சேதமடைவதற்குள் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் இரண்டு நாட்கள் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேலும் புகைப்போக்கிகள் சரியும் அபாயம் இருப்பதால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...