திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி: தீயணைப்பு வீரர்கள் அசத்தல்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் பல்வேறு பாதுகாப்பு முறைகளை விளக்கினர்.


Coimbatore: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழைக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் பருவமழை பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.



மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்றனர். மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்தால் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து விளக்கமளித்து காண்பித்தனர்.

மேலும், நீரில் மூழ்கியவரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், விபத்து நேரங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவான விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி அலுவலர்கள் இளஞ்செழியன், வீரராஜ் மற்றும் நிலை அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...