மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை பாலியல் தொழில் இடத்திற்கு அழைத்துச் சென்ற மூவர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற 30 வயது இளைஞரை பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் நேற்று கோவைக்குச் சென்று திரும்பி வந்தார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், தொடர் மழை காரணமாக ஆட்டோவில் வீடு செல்ல முடிவு செய்தார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி (33) என்பவர், இளைஞரை மேட்டுப்பாளையம் சாந்தி நகர் பகுதியில் உள்ள இரண்டு பெண்களிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற இளைஞரிடம் இரண்டு பெண்களும் தகாத முறையில் நடந்து கொண்டனர். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய இளைஞர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காரமடை பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், திம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட 39 வயது பெண்ணை கோவை மாவட்ட பெண்கள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆட்டோவில் ஏற வந்த பயணியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...