கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நம்ம ஊரு சந்தை நடைபெற்றது

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினரால் நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டது. இயற்கை விவசாய பொருட்கள், நெகிழி இல்லாத சூழலில் விற்பனை செய்யப்பட்டன.


Coimbatore: கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினர் சார்பில் "நம்ம ஊரு சந்தை" என்ற பெயரில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெற்றது. இந்த சந்தை பல்வேறு பகுதிகளில் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

அக்டோபர் 13 அன்று நடைபெற்ற இந்த சந்தையில், பல்வேறு விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்த காய்கறிகள், பழங்கள், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகள், நாட்டுச்சக்கரை, கடலை உருண்டை, கம்பு உருண்டை உள்ளிட்ட சத்தான தின்பண்டங்கள், கூழ் வகைகள் ஆகியவற்றை விற்பனை செய்தனர்.



மேலும், செக்கில் ஆட்டிய எண்ணெய், தேன், மூங்கிலால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தையின் சிறப்பம்சம் என்னவென்றால், நெகிழி பயன்படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இங்கு நெகிழி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் கவர்களில் பொருட்கள் கட்டித் தரப்படுகின்றன. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...