கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நம்ம ஊரு சந்தை நடைபெற்றது

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினரால் நம்ம ஊரு சந்தை நடத்தப்பட்டது. இயற்கை விவசாய பொருட்கள், நெகிழி இல்லாத சூழலில் விற்பனை செய்யப்பட்டன.


Coimbatore: கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இயல்வாகை அமைப்பினர் சார்பில் "நம்ம ஊரு சந்தை" என்ற பெயரில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெற்றது. இந்த சந்தை பல்வேறு பகுதிகளில் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

அக்டோபர் 13 அன்று நடைபெற்ற இந்த சந்தையில், பல்வேறு விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்த காய்கறிகள், பழங்கள், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகள், நாட்டுச்சக்கரை, கடலை உருண்டை, கம்பு உருண்டை உள்ளிட்ட சத்தான தின்பண்டங்கள், கூழ் வகைகள் ஆகியவற்றை விற்பனை செய்தனர்.



மேலும், செக்கில் ஆட்டிய எண்ணெய், தேன், மூங்கிலால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தையின் சிறப்பம்சம் என்னவென்றால், நெகிழி பயன்படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இங்கு நெகிழி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் கவர்களில் பொருட்கள் கட்டித் தரப்படுகின்றன. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...