கோவை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா

கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கலைகளை நிகழ்த்தினர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கிடசாமி சாலையில் உள்ள வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் (Sharathkala Navarathiri Mahotsavam) திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது.



இந்நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



திருவீதி உலாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர்.



அவர்கள் கொம்பு, நையாண்டி மேளம், செண்டை மேளம், காவடியாட்டம், தெய்யம், காளி ஆட்டம், திரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை நிகழ்த்திக்காட்டினர்.



இந்த ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி திருவேங்கடசாமி சாலை, தடாகம் சாலை, பெரியசாமி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



மேலும், பல்வேறு வேடம் அணிந்து கொண்டு நடனம் ஆடியபடி ஊர்வலமாகச் சென்ற கலைஞர்களை அனைவரும் மிகுந்த வியப்புடன் பார்த்து ரசித்தனர். ஊர்வலம் சென்ற பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை ஒன்றிணைத்து கொண்டாடிய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...