முரசொலி செல்வம் மறைவு: பல்சமய நல்லுறவு இயக்கம் இரங்கல்

முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான குரலாக விளங்கிய முரசொலி செல்வத்தின் சேவைகளை அவர் பாராட்டியுள்ளார்.


தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவருமான ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதியின் குரலாக, சமூக நீதிக்கான குரலாக ஒலித்த முரசொலி செல்வம் அவர்களின் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும். மண்ணில் மறைந்தாலும் மனதில் நிரந்தரமாக வாழும் ஐயா முரசொலி செல்வம் அவர்களுக்கு புகழ் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட இயக்கங்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், "மனித சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் நீங்க, சமத்துவம் தழைத்தோங்க களமாடியது திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கங்களின் சமூக செயல்பாடுகளையும், சமூக அவலங்களை அடியோடு ஒழிக்க ஓயாது ஒலிப்பது முரசொலி நாளிதழ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி செல்வத்தின் பங்களிப்பை விவரித்த அவர், "சமூக நீதி பத்திரிகையாளராக, திராவிட இயக்க எழுத்தாளராக திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட மகத்தான ஆளுமையாக விளங்கினார். மொழிப்போரில் முன் நின்ற, முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர் அமைப்பின் தலை சிறந்தவர்களில் ஒருவரான முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், 'சர்க்காரியா கமிஷன் - ஒரு சூழ்ச்சி வலை', 'சில நினைவலைகள்' போன்ற நூல்களை எழுதி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர்" என்று பாராட்டியுள்ளார்.

இறுதியாக, "மீளா துரயரில் ஆழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் குடும்பத்தாருக்கும், முரசொலி குழுமத்துக்கும், திராவிட இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலக தமிழ் நெஞ்சங்களுக்கும் பல்சமய நல்லுறவு இயக்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து, கண்ணீருடன் புகழ் அஞ்சலியை காணிக்கையாக்க விளைகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...