கோவை கொடிசியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்க முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிக்க அக்டோபர் 15 அன்று கொடிசியாவில் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், நடைமுறை மூலதனத்திற்காகவும் இந்நிறுவனங்களுக்கு நிதி வசதி தேவைப்படுகிறது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து கடன் வசதியாக்கல் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் கொடிசியா வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள "D" அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முகாம் தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், அவர்களின் வளர்ச்சிக்கு உதவவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...