திருப்பூர் பனியன் நிறுவனங்களில் விமரிசையாக நடைபெற்ற ஆயுதபூஜை விழா

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் ஏராளமாக பங்கேற்றனர். இயந்திரங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, வளாகம் அலங்கரிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழில் நகரமான திருப்பூரில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.



ஆயுதபூஜை நாளன்று, நிறுவனங்களின் வாசல்களில் வண்ணக் கோலமிடப்பட்டது. தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இயந்திரங்களுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்தனர். பனியன் கம்பெனி வளாகம் முழுவதும் செவ்வந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண காகிதங்கள் மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. வாழைக்கன்று மற்றும் கரும்புகள் நடப்பட்டன. வாகனங்களும் அலங்கரிக்கப்பட்டன.

தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் பதிவேடுகளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு, தொழிலும் தொழிலாளர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டுதல் செய்யப்பட்டது.

பூஜைக்குப் பிறகு, தொழிலாளர்களுக்கு பொங்கல், சுண்டல், பொறி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்பட்டது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...