கோவை தொப்பம்பட்டியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆயுத பூஜை விழா

கோவை தொப்பம்பட்டி பகுதியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.



Coimbatore: கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நிலையில், கோவை தொப்பம்பட்டி பகுதியில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில், ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, மாலை, வாழைக்கம்பம், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டன. மேலும், திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டதுடன், சாமி படங்களும் பூஜைப் பொருட்களும் வைக்கப்பட்டன. ஆண் மற்றும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு கற்பூரம் காட்டி வழிபாடு செய்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேலும், பொறி, கடலை, சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் தமோதரேன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரகாஷ் ஆகியோருடன் தீபக், உமதேவி, மோகன்ராஜ், மணி, அஸ்வின், அர்ஜுன், கணேஷ், சங்கர், விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...