கோவை தொப்பம்பட்டியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆயுத பூஜை விழா

கோவை தொப்பம்பட்டி பகுதியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.



Coimbatore: கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நிலையில், கோவை தொப்பம்பட்டி பகுதியில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில், ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, மாலை, வாழைக்கம்பம், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டன. மேலும், திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டதுடன், சாமி படங்களும் பூஜைப் பொருட்களும் வைக்கப்பட்டன. ஆண் மற்றும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு கற்பூரம் காட்டி வழிபாடு செய்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேலும், பொறி, கடலை, சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் தமோதரேன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரகாஷ் ஆகியோருடன் தீபக், உமதேவி, மோகன்ராஜ், மணி, அஸ்வின், அர்ஜுன், கணேஷ், சங்கர், விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...