கோவை ரேஸ்கோர்ஸில் சந்தன மரம் திருட்டு: போலீசார் விசாரணை

கோவை ரேஸ்கோர்ஸ் தொழிலாளர் துறை அலுவலர்கள் குடியிருப்பில் இருந்த 10 ஆண்டு வயதுடைய சந்தன மரம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து சந்தன மரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஸ்கோர்ஸ் தொழிலாளர் துறை அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள 4ம் எண் வீட்டின் முன் வளர்ந்திருந்த 10 ஆண்டு வயதுடைய சந்தன மரம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கிடைத்த தகவலின்படி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்வேறு இடங்களில் சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. தொழிலாளர் துறை அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள பத்து வீடுகளில், 4ம் எண் வீடு தற்போது காலியாக உள்ளது. இந்த வீட்டின் முன்பு வளர்ந்திருந்த சந்தன மரத்தை திருடர்கள் குறிவைத்துள்ளனர்.

திருடர்கள் மரத்தை வெட்டும்போது எழும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க, மரத்தின் கிளைகளில் டெலிபோன் கம்பியை கட்டியுள்ளனர். பின்னர் மரத்தின் தண்டை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், அக்டோபர் 10 அன்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருடர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தன மர திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...