கோவை துடியலூரில் மத மோதல் அபாயம்: இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்

கோவை துடியலூரில் பள்ளிவாசல் முன் தொழுகை நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் மத மோதல் அபாயம் குறித்து இந்து அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன. பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்தும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை துடியலூர் பகுதியில் மத மோதல் அபாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவில் கூறியுள்ள விவரங்கள்:

துடியலூர் சந்தை மைதானத்துக்கு பின்புறம் உள்ள 18 கிராமங்களுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க அரவான் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது அருகிலுள்ள மாகாளியம்மன், மங்கையம்மன், பொன்னியம்மன், விநாயகர் கோயில்களிலும் விழாக்கள் நடைபெறும்.

விநாயகர் கோயில் முதல் மாகாளியம்மன் கோயில் வரையிலான பாதையில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. கடந்த ஒரு மாதமாக வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்று கூறி பள்ளிவாசல் முன்பு தொழுகை நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.

பள்ளிவாசல் உள்ளே தொழுகை நடத்தினால் பிரச்னை இல்லை. ஆனால் வெளியில் தொழுகை நடத்துவதால் மற்ற மத மக்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை.

திருப்பூர் போன்று துடியலூர் பகுதிகளிலும் பங்களாதேஷ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக சந்தேகம் உள்ளது. இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வக்பு வாரியம் மூலம் சில இடங்களில் பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சரியான ஆதாரம் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் சொத்துகளை விற்கவோ, வாங்கவோ முடியாமல் தவிக்கின்றனர்.

துடியலூர், அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...