கோவை திரு.வி.க நகரில் சாலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

கோவை உருமாண்டம்பாளையம் திரு.வி.க நகரில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை உருமாண்டம்பாளையம் 14-வது வார்டுக்கு உட்பட்ட திரு.வி.க நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை.



கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. நேற்று இரவு, இப்பகுதியை சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது தோண்டப்பட்ட குழியில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுக 14-வது வார்டு செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ் தலைமையில் வெள்ளக்கிணறு முதல் கணபதி வரை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 14-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா தங்கவேலு, உதவி பொறியாளர் உத்தமன், துடியலூர் காவல்துறையினர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வேலைகள் செய்து சாலையை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...