திமுகவின் மூத்த தலைவர் முரசொலி செல்வம் காலமானார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுகவின் மூத்த தலைவரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் (84) அக்டோபர் 10 அன்று மாரடைப்பால் காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: திமுகவின் மூத்த தலைவரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் (84) அக்டோபர் 10 அன்று மாரடைப்பால் காலமானார்.

முரசொலி மாறனின் சகோதரரும், கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். முரசொலியை திமுகவினரை தாண்டி, சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்த முரசொலி செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், "என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தை தாக்கி வேதனை குருதியை வடிய செய்கிறது. கருணாநிதி மறைந்த பிறகு சாய்வதற்கு கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

திமுகவின் மூத்த தலைவரான முரசொலி செல்வத்தின் மறைவு கட்சியினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...