கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி

கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சியை நடத்தியது. இதில் 28 பயணிகள் மற்றும் 2 ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்ததாக பாவனை செய்யப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் இணைந்து 'பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி'யை இன்று நடத்தியது. இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்று, ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டார்.

பேரிடர்காலங்களில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உயிர்களைக் காப்பாற்றும் 'கோல்டன் ஹவர்" என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.



இந்த ஒத்திகை பயிற்சியில், ரயில் விபத்தில் இருபத்தெட்டு பயணிகள் மற்றும் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டது. பின்னர் பேரிடர்கால அவசரநிலை குறித்து கோவை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, "மஞ்சள் குறியீடு" (Code Yellow) அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையின் அவசரநிலை குழுக்களான தல மீட்பு குழு, உள் ட்ரைஜ் குழு, கார்டன் குழு, சால்வேஜ் குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் மேலாண்மை குழு ஆகிய ஐந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அடுத்தடுத்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் என அனைத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக ஒத்திகை செய்யப்பட்டது.



இந்த ஒத்திகை பயிற்சி விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பெருமளவு காயமடைந்தவர்களை கையாள்வது மற்றும் விரைந்து திறம்பட நோயாளிகளை வகைப்படுத்தும் செயல்முறை பற்றி மருத்துவ பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கான பயிற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஒத்திகை பயிற்சியில், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரிகள், கோவை ரயில் நிலைய அதிகாரிகள், காவல்துறையினர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என பலர் ஈடுபட்டனர். தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட இந்த பரபரப்பான ஒத்திகை காட்சிகளை ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் உற்று நோக்கினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...