கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி

கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சியை நடத்தியது. இதில் 28 பயணிகள் மற்றும் 2 ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்ததாக பாவனை செய்யப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் இணைந்து 'பேரிடர்கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி'யை இன்று நடத்தியது. இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்று, ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டார்.

பேரிடர்காலங்களில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உயிர்களைக் காப்பாற்றும் 'கோல்டன் ஹவர்" என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.



இந்த ஒத்திகை பயிற்சியில், ரயில் விபத்தில் இருபத்தெட்டு பயணிகள் மற்றும் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டது. பின்னர் பேரிடர்கால அவசரநிலை குறித்து கோவை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, "மஞ்சள் குறியீடு" (Code Yellow) அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையின் அவசரநிலை குழுக்களான தல மீட்பு குழு, உள் ட்ரைஜ் குழு, கார்டன் குழு, சால்வேஜ் குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் மேலாண்மை குழு ஆகிய ஐந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அடுத்தடுத்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகள் என அனைத்து காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக ஒத்திகை செய்யப்பட்டது.



இந்த ஒத்திகை பயிற்சி விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பெருமளவு காயமடைந்தவர்களை கையாள்வது மற்றும் விரைந்து திறம்பட நோயாளிகளை வகைப்படுத்தும் செயல்முறை பற்றி மருத்துவ பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கான பயிற்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த ஒத்திகை பயிற்சியில், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரிகள், கோவை ரயில் நிலைய அதிகாரிகள், காவல்துறையினர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என பலர் ஈடுபட்டனர். தத்ரூபமாக நிகழ்த்தப்பட்ட இந்த பரபரப்பான ஒத்திகை காட்சிகளை ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் உற்று நோக்கினர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...