பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தத்தை கொல்ல சதி முறியடிப்பு - வங்கதேச குற்றவாளிகள் கைது

கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. வங்கதேச ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித் திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஏ.பி. முருகானந்தம், பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டவர். மேலும், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை கடுமையாக எதிர்த்து போராடியவர் முருகானந்தம். சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார்.

கடந்த சில வாரங்களாக, மேற்கு வங்கத்திலிருந்து ஊடுருவிய இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரிலும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாசவேலைகளை செய்த இந்தக் கும்பல், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, முருகானந்தத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த தகவல் பா.ஜ.க கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...