பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தத்தை கொல்ல சதி முறியடிப்பு - வங்கதேச குற்றவாளிகள் கைது

கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. வங்கதேச ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்தை கொலை செய்ய நடந்த சதித் திட்டம் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ஏ.பி. முருகானந்தம், பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டவர். மேலும், பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை கடுமையாக எதிர்த்து போராடியவர் முருகானந்தம். சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார்.

கடந்த சில வாரங்களாக, மேற்கு வங்கத்திலிருந்து ஊடுருவிய இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரிலும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாசவேலைகளை செய்த இந்தக் கும்பல், முருகானந்தத்தை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, முருகானந்தத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்த தகவல் பா.ஜ.க கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...