கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க 18002021989 என்ற கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சேவை அலுவலக நேரங்களில் கிடைக்கும்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (அக்டோபர் 9) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2023-24 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மாநில கோரிக்கையின் போது, அமைச்சர் அளித்த அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க சட்ட ஆலோசனைகள் வழங்கவும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஜாதி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர், வழக்கு பதிவு செய்தல் மற்றும் முறையீடுகளை, 18002021989 என்ற கட்டணமில்லா எண்ணை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம். இந்த சேவை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் கிடைக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...