கோவையில் ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் - சிறு வியாபாரிகள் கோரிக்கை

கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கம் ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் சிறு வியாபாரிகளை பாதிப்பதாகவும், தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

அவர்கள் கூறியதாவது: "ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தும் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, அரசு ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும்."

"ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பட்டாசுகள் பாதுகாப்பில்லாமல் சாதாரண வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது."

"உற்பத்தி உரிமம் இல்லாத நிறுவனங்களும், ஜிஎஸ்டி செலுத்தாதவர்களும் தான் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். ஆன்லைனில் விற்கப்படும் அனைத்து பட்டாசுகளும் தரமற்றவை. அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

மேலும் அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்:

1. வியாபார உரிமம் 10 நாட்களுக்கு பதிலாக 15 நாட்களாக நீட்டிக்கப்பட வேண்டும்.

2. பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

3. சரவெடியை பழைய முறைப்படி கெமிக்கல் கொண்டு தயாரிக்க அனுமதிக்க வேண்டும்.

இறுதியாக, "தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து பட்டாசு கடைகளிலும் நோட்டீஸ் வழங்க இருக்கிறோம். கடைகளில் பிளக்ஸ் ஒட்டி 'இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம்' என்று தெரிவிக்க உள்ளோம்" என்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...