திருப்பூர்-கோவை சாலையில் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து: பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர்-கோவை சாலையில் காற்று வீச்சால் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து. காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டு குவிகிறது.


திருப்பூர்: திருப்பூர் மற்றும் கோவை இடையேயான சாலையில் ஒரு தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த ஏ.எஸ்.எம் என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்துரைச் சேர்ந்த 32 வயதான சுரேந்திரன் இயக்கி வந்தார். பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அவிநாசி பைபாஸ் சாலையில் பேருந்து செல்லும்போது, அதிக காற்று வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கி விழுந்தது. இதில் ஓட்டுனர் சுரேந்திரனின் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் பட்டு படுகாயம் ஏற்பட்டது.

எனினும், தனக்கு ஏற்பட்ட காயங்களை பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சுரேந்திரன் பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தப்பித்தனர்.

இந்த சம்பவத்தை கண்ட பயணிகள் சுரேந்திரனை பாராட்டி, அருகிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை - திருப்பூர் இடையே தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்காக பயணம் செய்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...