திருப்பூர்-கோவை சாலையில் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து: பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர்-கோவை சாலையில் காற்று வீச்சால் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து. காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டு குவிகிறது.


திருப்பூர்: திருப்பூர் மற்றும் கோவை இடையேயான சாலையில் ஒரு தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த ஏ.எஸ்.எம் என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்துரைச் சேர்ந்த 32 வயதான சுரேந்திரன் இயக்கி வந்தார். பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அவிநாசி பைபாஸ் சாலையில் பேருந்து செல்லும்போது, அதிக காற்று வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கி விழுந்தது. இதில் ஓட்டுனர் சுரேந்திரனின் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் பட்டு படுகாயம் ஏற்பட்டது.

எனினும், தனக்கு ஏற்பட்ட காயங்களை பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சுரேந்திரன் பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தப்பித்தனர்.

இந்த சம்பவத்தை கண்ட பயணிகள் சுரேந்திரனை பாராட்டி, அருகிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை - திருப்பூர் இடையே தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்காக பயணம் செய்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...