திருப்பூர்-கோவை சாலையில் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து: பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர்-கோவை சாலையில் காற்று வீச்சால் பேருந்து கண்ணாடி உடைந்து விபத்து. காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டு குவிகிறது.


திருப்பூர்: திருப்பூர் மற்றும் கோவை இடையேயான சாலையில் ஒரு தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்தும் பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய ஓட்டுனர் சுரேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த ஏ.எஸ்.எம் என்ற தனியார் பேருந்தை தொண்டாமுத்துரைச் சேர்ந்த 32 வயதான சுரேந்திரன் இயக்கி வந்தார். பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

அவிநாசி பைபாஸ் சாலையில் பேருந்து செல்லும்போது, அதிக காற்று வீசியதால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கி விழுந்தது. இதில் ஓட்டுனர் சுரேந்திரனின் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் கண்ணாடித் துண்டுகள் பட்டு படுகாயம் ஏற்பட்டது.

எனினும், தனக்கு ஏற்பட்ட காயங்களை பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சுரேந்திரன் பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தப்பித்தனர்.

இந்த சம்பவத்தை கண்ட பயணிகள் சுரேந்திரனை பாராட்டி, அருகிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை - திருப்பூர் இடையே தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்காக பயணம் செய்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இத்தகைய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...