உடுமலை அருகே அரசு பேருந்து மோதி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் குரு பிரசாத் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் பலன் இல்லாமல் போனது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடுமலை அருகே உள்ள தாந்தோனி பகுதியில் தாராபுரம் சாலையில் இருந்து உடுமலையை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், உடுமலையில் இருந்து தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் குரு பிரசாத் (27) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.



எதிர்பாராத விதமாக அரசு பேருந்து குரு பிரசாத்தின் இருசக்கர வாகனத்தை மோதியது. இதில் குரு பிரசாத் சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரு பிரசாத் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், பேருந்து மோதிய வேகத்தில் ஹெல்மெட் உடைந்து போனதால் அவரால் உயிர் தப்ப முடியவில்லை.

உடுமலை அருகே தும்பலபட்டியைச் சேர்ந்த குரு பிரசாத்துக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...