உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பர் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா

உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பரின் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் தேவராட்டம் ஆடி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரின் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட எத்தலப்பரின் முழு உருவ சிலையும், திருமூர்த்தி மலையில் அமைக்கப்பட்ட மணிமண்டபமும் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரியமான தேவராட்டம் ஆடியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி மற்றும் பொதுமக்கள் பலர் எத்தலப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திரப் போராட்ட வீரரின் முழு திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீரபாண்டிய கட்டபொம்மன் கழகம் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...