சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.10 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 6 மாத காலத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து ரூ.10.82 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட இது 37.1 சதவீதம் அதிகமாகும்.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து ரூ.10,82,514 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 37.1 சதவீதம் அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 1,36,832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தொடர்பாக 79,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட வழக்குகளில் 16.2 சதவீதமும், அபராதத் தொகையில் 20 சதவீதமும் அதிகமாகும்.

குழந்தைகளுக்கான டிக்கெட்டில் பெரியவர்கள் பயணித்தல், சாதாரண வகுப்பு டிக்கெட்டில் உயர் வகுப்பில் பயணித்தல், வேறு வகுப்பில் பயணம், சாதாரண ரயில் டிக்கெட்டில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தல், பயண தூரத்தைக் காட்டிலும் கூடுதலாக பயணித்தல் உள்ளிட்ட முறைகேடான பயணங்களுக்கு 68,681 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.71 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 68.9 சதவீதம் அதிகமாகும்.

முன்பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டு சென்றதற்காக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் பொறுத்தவரை, முதல் வகுப்பு ஏ.சி.யில் ஒரு பயணி 70 கிலோ வரை இலவசமாகக் கொண்டு செல்லலாம். டயர் 2 ஸ்லீப்பர் அல்லது முதல் வகுப்புக்கு 50 கிலோ, ஏ.சி. 3 டயர் ஸ்லீப்பர் 40 கிலோ, ஸ்லீப்பர் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை இலவசமாக கொண்டு செல்லலாம். கூடுதல் சுமைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அக்டோபர் 8 அன்று வெளியிட்டுள்ளது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...