சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் ரூ.10 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் 6 மாத காலத்தில் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து ரூ.10.82 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட இது 37.1 சதவீதம் அதிகமாகும்.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முறைகேடாக பயணித்தவர்களிடம் இருந்து ரூ.10,82,514 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 37.1 சதவீதம் அதிகமாகும்.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 1,36,832 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தொடர்பாக 79,006 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட வழக்குகளில் 16.2 சதவீதமும், அபராதத் தொகையில் 20 சதவீதமும் அதிகமாகும்.

குழந்தைகளுக்கான டிக்கெட்டில் பெரியவர்கள் பயணித்தல், சாதாரண வகுப்பு டிக்கெட்டில் உயர் வகுப்பில் பயணித்தல், வேறு வகுப்பில் பயணம், சாதாரண ரயில் டிக்கெட்டில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தல், பயண தூரத்தைக் காட்டிலும் கூடுதலாக பயணித்தல் உள்ளிட்ட முறைகேடான பயணங்களுக்கு 68,681 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.71 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 68.9 சதவீதம் அதிகமாகும்.

முன்பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டு சென்றதற்காக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் பொறுத்தவரை, முதல் வகுப்பு ஏ.சி.யில் ஒரு பயணி 70 கிலோ வரை இலவசமாகக் கொண்டு செல்லலாம். டயர் 2 ஸ்லீப்பர் அல்லது முதல் வகுப்புக்கு 50 கிலோ, ஏ.சி. 3 டயர் ஸ்லீப்பர் 40 கிலோ, ஸ்லீப்பர் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை இலவசமாக கொண்டு செல்லலாம். கூடுதல் சுமைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அக்டோபர் 8 அன்று வெளியிட்டுள்ளது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...