கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மாநாடு போத்தனூரில் நடைபெற்றது. 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் 'மகளிர் மாநாடு' இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.



நாட்டில் அதிகரித்து வரும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி, 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற கருப்பொருளில் அகில இந்திய அளவில் பரப்புரையை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இப்பரப்புரையின் மாநில அளவிலான இறுதி நிகழ்வாக இந்த மகளிர் மாநாடு நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் உமர் ஃபாரூக் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநாட்டில், 'வேலிதாண்டும் வெள்ளாடுகள்' என்ற தலைப்பில் தற்கால குடும்பங்களின் பிரச்சினைகள் குறித்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - தமிழ்நாடு & புதுச்சேரி மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ தனது உரையில், "மனித சமூகம் சிறந்த ஒழுக்க மாண்புகளைக் கொண்டுள்ள வரை மட்டுமே வளர்ச்சியும், மேன்மையும் அடைந்திட முடியும். அவற்றை கடைபிடிக்கும் வரையில் மட்டுமே மனிதகுலம் நிலைகொண்டிருக்கும்" என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும், "மது, போதை உள்ளிட்ட தீமைகள் தற்காலத்தில் அதிகரித்து வரும் சூழலில், இறைவழிகாட்டுதல்களை ஏந்தியுள்ள இந்தச் சமூகம் அனைத்து தரப்பு மக்களையும் ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான வாழ்வியலின் அவசியம் குறித்து உணர்த்துவதுடன் அவர்களுக்கான முன்னுதாரணமாக இருப்பதும் நமது கடமை" என்று வலியுறுத்தினார்.

இம்மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிர்வாகிகள், முக்கிய ஆளுமைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...