கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இன்று (அக்டோபர் 8) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% வரி உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வருடா வருடம் வரி உயர்வு மக்களை பாதிக்கும் என்றும் வேலுமணி தெரிவித்தார்.



கொரோனா காலத்திலும் மக்களை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிகளை உயர்த்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் வேலுமணி தெரிவித்தார். இப்போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...