உடுமலையில் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சொத்து வரி, மின் கட்டண உயர்வைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், "காப்பாற்றுவோம் காப்பாற்றுவோம் கஞ்சா மற்றும் மது போதை பிடியிலிருந்து கல்லூரி மாணவர்களை காப்பாற்றுவோம்", "வேதனையாச்சி வேதனையாச்சு விடியா தி.மு.க ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையோ வேதனையாச்சு", "கெட்டுப் போச்சு கெட்டுப் போச்சு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு", "ஏறிப்போச்சு ஏறிப்போச்சு மின் கட்டண வரி சொத்து வரி ஏறி போச்சு" போன்ற கோஷங்களை எழுப்பினர்.



மேலும், சொத்து வரியை உயர்த்தியதோடு மக்களுக்கு விரோதமாக ஆட்சி செய்து வரும் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கண்டித்து, "ஸ்டாலின் அரசே பதவி விலகு" என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர்ராஜன், பிரனேஷ் மற்றும் நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...