தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்புக்கு மட்டுமே வரியில்லை - பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்

பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அரசின் வரி உயர்வுகளை கடுமையாக விமர்சித்தார்.


Coimbatore: பொள்ளாச்சியில் அக்டோபர் 8 அன்று, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.



போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத் தவிர வேறு எந்தத் திட்டங்களும் தற்போது செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். புதிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடிநீர்த் திட்டங்கள் போன்ற எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த தாலிக்கு தங்கம், லேப்டாப் வழங்கும் திட்டம், ஆடு, கறவை மாடு, கோழி வழங்கும் திட்டம் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெயராமன் குறிப்பிட்டார். இத்திட்டங்கள் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.

"சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கும் இறப்பவர்களுக்கும் மட்டுமே வரியில்லை. இதைத் தவிர மற்ற அனைத்து வரிகளையும் தமிழக அரசு உயர்த்திவிட்டது," என்று பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...